இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அதிரடி நடவடிக்கை..!

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (09) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை துப்புரவு பணிகள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாடசாலைக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எச். சஞ்சீவனி தெரிவித்தார்.
இந்த விசேட செயற்திட்டத்தின் போது நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்படுவதுடன் , மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தி கேட்ட மாதிரி ஒரு போட்டோ தர முடியுமா