அரச, தனியார் பேருந்துகளில் AI பயன்பாடு

அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் தூக்கத்தில் அல்லது சோர்வாக இருந்தால், பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த அம்சங்களை நாட்டிலுள்ள பல நிறுவனங்கள் கடந்த வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அவை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.