Sports

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்

பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய தலைவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. புதிய தலைவரான மெஹிதி ஹசன் மிராஸ் அடுத்த ஓராண்டுக்கு அணியின் தலைவராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதாகும் மெஹிதி ஹசன் மிராஸ் இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியை வழிநடத்தவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button