News

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க பிரதமர் பிலிப்பைன்சின் மனிலா நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதற்கமைய லொஸ் பெனோஸ் நகரிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கை நெற் செய்கை விவசாயிகள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரித்தல் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்கள் உட்பட ஆராய்ச்சி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button