NewsSri Lanka News

சம்மாந்துறையில் பொதுச் சுகாதாரத்தைப் பேண விசேட செயலமர்வுகள்: இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் இரண்டு விசேட செயலமர்வுகள் அண்மையில் நடைபெற்றன.

​சுகாதார வைத்திய அதிகாரி (MOH) Dr. நௌஷாத் முஸ்தபா மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ரம்ஸீன் முஹம்மது ஆகியோரின் நேரடி வழிகாட்டலில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

முதல் செயலமர்வானது பிரதேசத்திலுள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக நடைபெற்றது. இதன்போது, இறைச்சிக் கூடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, எலிக் காய்ச்சல் (Leptospirosis) மற்றும் டெங்கு (Dengue) பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து சுகாதார அதிகாரிகளால் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இரண்டாவது செயலமர்வில் வீதியோர மீன் வியாபாரிகள் கலந்துகொண்டனர். சம்மாந்துறை நகர்ப் பகுதியில் நிலவும் வீதி நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீதியோரங்களில் வியாபாரம் செய்வதைத் தவிர்த்து, தமது வியாபார நடவடிக்கைகளை அங்கீகரிக்கப்பட்ட சந்தைத் தொகுதிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு இதன்போது வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், மிருக வைத்தியர்கள், பிரதேச சபைச் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (Technical Officers), சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​பொதுமக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்படும் இத்திட்டங்களுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதேச சபை இதன்போது கேட்டுக்கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button