Sports

ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ணம் – இலங்கையில் 11 லீக் போட்டிகள் ஏற்பாடு

இந்தியாவில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பி.சி.சி.ஐ செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 30 தொடக்கம் நவம்பர் 02 வரை உலகக்கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. குறித்த உலகக் கிண்ணத் தொடரில் 28 லீக் போட்டிகளுடன் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் அடங்கலாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் லீக் போட்டிகளில் 11 போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட போட்டிகளும் கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர்
அணி தங்களது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 30ஆம் திகதி பெங்களுரில் இந்தியாவை எதிர்கொள்கிறது. 4ஆம் திகதி கொழும்பில் அவுஸ்திரேலியாவையும், 11ஆம் திகதி குவாஹத்தியில் இங்கிலாந்தையும், 14ஆம் திகதி கொழும்பில் நியூசிலாந்தையும், 17ஆம் திகதி கொழும்பில் தென்னாபிரிக்காவையும், 20ஆம் திகதி கொழும்பில் பங்களாதேஷையும், 24ஆம் திகதி கொழும்பில் பாகிஸ்தானையும், எதிர்கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button