Sri Lanka News

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பஸ் கட்டண திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றைக் கோரி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மாலை நேரப் பணிக்குத் திரும்பும் பயணிகளைப் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால், தற்போதைய கட்டணத்தில் சேவையை முன்னெடுப்பது நட்டத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலை நேரப் போக்குவரத்து நெரிசலின் போது இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டால், பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button