Sri Lanka News
அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து? கசிந்த ரகசியத் தகவல்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.




