Sports

REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிண்ணத்தை வென்றது அட்டாளச்சேனை சோபர் அணி


மஜீட். ARM

​சம்மாந்துறை ரியல் நஜா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் (07) சென்னல் சாஹிரா பாடசாலை மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், அட்டாளச்சேனை சோபர் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
​இறுதிப் போட்டியில், அட்டாளச்சேனை சோபர் அணி பலம் பொருந்திய சம்மாந்துறை நியூ சன் அணியை எதிர்கொண்டது. இதில் நியூ சன் அணியை வெற்றிகொண்ட சோபர் அணி, வெற்றிக் கிண்ணத்தையும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் தனதாக்கிக் கொண்டது.

​இரண்டாம் இடத்தைப் பிடித்த சம்மாந்துறை நியூ சன் அணி, வெற்றிக் கிண்ணத்துடன் 40 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.

​இந்த வெற்றியின் மூலம், அட்டாளச்சேனை சோபர் அணி மென்பந்து கிரிக்கெட்டில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.

சம்மாந்துறை நியூ சன் அணி ,மற்றும் அட்டாளச்சேனை சோபர் அணிக்கு எமது சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button