News

ஆண்டுக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் முறையான சிகிச்சை பெற்றால் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த 2022 ஆம் ஆண்டில் 904 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது.

வருடத்துக்கு 600 முதல் 800 வரையாக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக சுமார் 200 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

2020 முதல் வருடத்துக்கு சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.

இவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் நோயாளர்கள் தாமதாக கண்டறியப்படுகின்றனர்.

சரியான நேரத்தில் சிகிக்சை வழங்கினால் இறப்புக்களை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button