News
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என சபை உறுதிப்படுத்தியுள்ளது