Accident

பொத்துவில் – வெல்லவாய வீதியில் பஸ் விபத்து; சாரதி பலி

மொணராகலை, வெலியாய பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் ஒன்றின் சாரதி மரணமடைந்துள்ளார்.

பொத்துவில் – வெல்லவாய வீதியில் 255km மைல்கல் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் (SLTB) ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இ.போ.ச. பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தம்பகல திசையிலிருந்து மொணராகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று எதிர்த் திசையில் யாத்திரிகர்களுடன் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிறிகல, மற்றும் மொணராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button