Sri Lanka News

நிந்தவூர் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே இன்று நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும் பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 34 பொலிஸ் பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்பில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 34 தலைமை பொலிஸ் பரிசோதகர்களையும் பொலிஸ் பரிசோதகர்களையும் இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 27 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும் 7 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button