
அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் கிரீன் கார்ட் மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
“பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட தீவிரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கிரீன் கார்ட் மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும். அமெரிக்காவில் குடியிருப்பது என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை” என்று பதிவிட்டுள்ளது.