Sri Lanka News

முல்லைத்தீவில் பற்றி எரியும் கடைத்தொகுதி!

முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன.

மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுவதால் தீ பரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளது.

தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசக்கூடும் மிக மிக மக்கள் அவதானமாக இருக்கவும். முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமையினால் உடனடி நடவடிக்கையாக படையினரின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button