
ஒஸ்ரியாவின் உயா்நிலைப் பாடசாலையொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் நேற்று (16) பேசுகையில், நாட்டில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை மேலும் பொறுப்புடன் ஒழுங்காற்றும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தார்.