Sports

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசத் தொடருக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் 2026 ஜனவரியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இரு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்தத் தொடர் ஜனவரி 8, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கான ஆரம்ப கட்டத் தயார்படுத்தலாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

இதற்கு முன்னர், நவம்பரில் இலங்கை அணி பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் இலங்கை விளையாட இருந்தது. எனினும், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான பதற்றங்கள் காரணமாக, முத்தரப்புத் தொடர் நிச்சயமற்றதாக உள்ளது.

இதேநேரம், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துடன் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரை நடத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.

கொழும்பில் பாகிஸ்தான் தொடரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இடவசதி மற்றும் சர்வதேச அட்டவணைக்கு ஏற்ப திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தொடர் இறுதி செய்யப்பட்டால், 2023 இற்குப் பிறகு பாகிஸ்தான் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாக இது அமையும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button