Uncategorized

ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிப்பதாகவும், தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் துபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், யாரேனும் அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றிருந்தால், விமானச் சேவை மற்றும் தமது பயண முகவர்களுடன் தொடர்பைப் பேணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அதிகாரபூர்வ செய்திகளை மட்டுமே நம்புமாறும், அமீரகத்தில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் மற்றும் அங்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button