Sports
பில்லியனராகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது இலாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இதன்மூலம் விளையாட்டுத்துறையில் முதல் பில்லியனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டு வரை பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் சொத்து மதிப்பு சுமார் 160 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.



