Sports

பிபா உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில், கத்தார் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கத்தார் நேற்று (14) நடைபெற்ற முக்கியமான தகுதி சுற்றுப் போட்டியில் கத்தார் அணி 2–1 என்ற கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE) வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும், 2022 பிபா உலகக் கோப்பையை நடத்தும் நாட்டு என்ற அடிப்படையில் பங்கேற்றதற்குப் பிறகு, தகுதி அடிப்படையில் முதல் முறையாக கத்தார் அணி உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெற்றுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இது உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தும் முதல் முறை ஆகும்.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் ஜூன் – ஜூலை 2026 காலப்பகுதியில் நடைபெறும். அமெரிக்காவின் 11 நகரங்கள், மெக்சிகோவின் 3 மற்றும் கனடாவின் 2 நகரங்கள் போட்டிகளை நடத்தவுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button