இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று (26) இரவு இந்தியா – இலங்கை அணிகள் டுபாயில் மோதுகின்றன.
ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.
இந்த போட்டி இரவு 8 மணிக்கு டுபாயில் நடைபெறுகிறது.
சரித் ஹசலங்க தலைமையிலான இலங்கை அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.




