News

சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல்

சிறைச்சாலை திணைக்களத்திலுள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 554 அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரச வர்த்தமானி ஒகஸ்ட் 29 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

புதிய ஆட்சேர்ப்பில் 409 ஆண் சிறை காவலர்கள், 70 பெண் சிறை காவலர்கள், 55 இரண்டாம் தர நிலை ஆண் சிறை அதிகாரிகள், 7 இரண்டாம் தர நிலை பெண் சிறை அதிகாரிகள், 10 இரண்டாம் தர நிலை ஆண் மறுவாழ்வு அதிகாரிகள் மற்றும் 3 இரண்டாம் தர நிலை பெண் புனர்வாழ்வு அதிகாரிகள் அடங்குவர்களென குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button