
நியூசிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கு முன்பாக இந்த தொடர் நடைபெறவுள்ளது.
இதன்படி குறித்த தொடரானது ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று அறிவித்துள்ளது.
இதற்கமைய பரோடா, ராஜ்கோட், இந்தூர், ஆகிய இடங்களில் ஒரு நாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர் கவுகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.