Sports

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் நிக்கோலஸ் பூரன்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் நிக்கோலஸ் பூரன் தனது ஒன்பது வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு அளிக்கிறார்.

டி20 துடுப்பாட்ட வீரர்களில் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலிடத்தில் உள்ள வீரரான நிக்கோலஸ் பூரன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதான இவர், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 61 போட்டிகளில் விளையாடி, 1,983 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அதேநேரம், 106 டி20 போட்டிகளில் விளையாடி 2,275 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவர் 136.39 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

2024 டி20 உலகக் கிண்ணத்தில் கிறிஸ் கெய்லை முந்திய பூரன், டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரராகவும் (106 போட்டிகள்) தனது அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் (2275) திகழ்கிறார்.
அவர் இறுதியாக 2024 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடினார்.

தனது பதின்ம வயது பருவத்தில் ஒரு சிறந்த வீரராகக் கருதப்பட்ட பூரன், 2014 U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி மூலம் தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், திங்களன்று ஒரு அறிக்கையில் பூரனின் சேவைக்கு கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் நன்றி தெரிவித்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button