Sri Lanka News

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பதற்காக பாடசாலை அனுமதி மறுக்க முடியாது! அமைச்சர் அதிரடி உத்தரவு

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேச செலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு என்பதால், அதிகாரிகள் அந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்க முடியாது.

பதிவுத் திணைக்களத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை முடியும் வரை, அத்தகைய அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர வேண்டிய அனைத்துப் பிள்ளைகளுக்கும், பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வகுப்பறைகளில் இருக்க வேண்டும்.

கல்வி கற்பதற்கும் வகுப்பறையில் இருப்பதற்கும் ஒரு பிள்ளைக்கு இருக்கும் உரிமைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு தடையாக இருக்கக்கூடாது என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button