Sri Lanka News
இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல் – தட்டுப்பாட்டுக்கு தீர்வு

40,000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே வழங்கிய தகவல்களின்படி,குறித்த எரிபொருள் கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும், 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டை வந்தடையும் இந்த எரிபொருள் கையிருப்பு, தரப்பரிசோதனைகளுக்குப் பின்னர் தரையிறக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




