ஈரானிய தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ருத்’ (Truth Social) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு அமெரிக்க மக்களிடையே ஆற்றவுள்ள முக்கிய உரைக்கு முன்னதாக இந்தத் தகவலை அவர் பகிர்ந்துள்ளார். ஈரானின் புதிய ஆட்சிமுறை ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர் தனக்கு முன்னிருந்தவர்களை விடக் குறைந்த தீவிரப்போக்குடையவர் மற்றும் அதிக புத்திசாலி என்றும் வர்ணித்துள்ளார்.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும் வரை போர்நிறுத்தம் குறித்துப் பரிசீலிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
“அதுவரை நாம் ஈரானை அடியோடு அழிப்போம்” என ட்ரம்ப் மிகவும் காட்டமாகத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📌 ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மீளப் பெறுவதே அமெரிக்காவின் தற்போதைய பிரதான இலக்காகக் கருதப்படுகிறது.




