World News
திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தார் எனர்ஜி! – எரிவாயு விலை உயர்வு

கத்தாரின் முக்கிய தொழில் நகரங்களான ராஸ் லப்பான் (Ras Laffan) மற்றும் மெசையீத் (Mesaieed) ஆகியவற்றில் உள்ள எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான கத்தாரில் உற்பத்தி முடங்கியுள்ள செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சர்வதேச எரிசக்தி சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை சுமார் 22% முதல் 40% வரை உயர்ந்துள்ளது. இது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.



