India News
வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: பாதிப்பு என்ன?

இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 அளவில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 அளவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
திடீர் நில அதிர்வால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்து உள்ளதுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




