World News
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா? வெளியான அறிவிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் டெர்னேட் (Ternate) கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா கடற் பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதனை அண்மித்த நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




