News

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் மூலம், இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அபராதத் தொகை, கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான (6 மாதங்கள்) காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், நாடு முழுவதும் சுமார் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனைகளில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபை, எதிர்காலத்திலும் இதுபோன்ற விலைக் கட்டுப்பாட்டு மீறல்களைத் தடுக்கும் வகையில், இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில், கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு வெதுப்பக வலையமைப்பு அனுமதிக்கப்பட்ட விலையை விட ரூ.20 அதிக விலைக்கு ஒரு போத்தல் குடிநீரை விற்பனை செய்தமைக்காக ரூ.600,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button