News

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் புதிய சட்டம்

நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஆசனப்பட்டிகள் இல்லாத சில வாகனங்களுக்கு அதனை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button