News

களுத்துறையில் 15 வயது சிறுமி கர்ப்பம்: டிக்டாக் காதலன் தலைமறைவு

களுத்துறைப் பிரதேசத்தில் 15 வயது பாடசாலைச் சிறுமியொருவர் கர்ப்பமடைந்த நிலையில், அவருக்குக் காரணமான டிக்டாக் காதலன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமிக்கும் டிக்டாக் காதலன் ஒருவனுக்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தத் தொடர்பின் விளைவாகவே சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், தலைமறைவாகியுள்ள டிக்டாக் காதலனைத் தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button