Sri Lanka News

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நிந்தவூரில் முதற்கட்டம் செல்லும் பெண்களுக்கு ஊக்கமாக சதொச உணவுப் பொதி –

முதல் முறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ரூ.10,000 பெறுமதியான சதொச உணவுப் பொதிக்கான வவுச்சரினை வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி டி. ஜெசான் அவர்களும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு, முதற்கட்ட பயனாளி ஒருவரின் தந்தைக்கு வவுச்சரினை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இத்தகைய ஊக்கத்தொகைகள், வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.

#நிந்தவூர்பிரதேசசெயலகம் #வெளிநாட்டுவேலைவாய்ப்பு #சதொசஉணவுப்பொதி #பெண்கள்சாதனை #அரசுத்திட்டம் #பொதுமக்கள்நலன் #முன்னேற்றவழி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button