Sports

இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாக உள்ளதுடன், டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குள் பிரவேசிக்க மாலை 5 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button