
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், எடப்பாடி கே. பழனிசாமி மிகச்சரியாக குறிப்பிட்டதைப் போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மீக நோக்கத்துடன் நாளை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.