
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, மழை காரணமாக பந்துகள் எதுவும் வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதேநேரம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ளது.