37
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஒரு குறைபாட்டுப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியின் இறுதிப் பந்தில் பிரபாத் ஜெயசூரியா ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது, அவர் தனது துடுப்பால் எல்லைக் கயிற்றின் தடுப்புப் பகுதிகளைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

