News
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு பதிலாக, நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள் அவற்றை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக, சுமார் 240,000 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.



