Sri Lanka News

பொரளையில் தாழிறங்கிய வீதி – போக்குவரத்து பாதிப்பு

பொரளை, ஃபார்ம் சந்திக்கருகிலிருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிக்கையொன்றின் மூலம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி மாற்றுவழிகளாவன,

மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.

ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கோட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம்.

கொழும்பிருந்து மொடன் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ்.சேனநாயக்க சந்தியில் இடது பக்கம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கோட்டா வீதியினூடாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வீதிக்குள் நுழையலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button