Sri Lanka News

தொழில் நியாய சபை தலைவர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், வருடாந்த சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்கள் நிறைவேற்ற வேண்டிய குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கை குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பள அதிகரிப்புக்குரிய வருடத்தில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக அறிவிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கை 45 ஆக இருக்க வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வருடாந்த சம்பள அதிகரிப்புக்கான விண்ணப்பப் படிவம், சம்பள அதிகரிப்புத் திகதியிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்கும் நடைமுறை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button