News

இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாட்டினால் நாட்டில் வருமான இழப்பு

இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாக, நாட்டின் நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அது உள்ளூர் வணிகங்களைப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

சீன நாட்டினர் இலங்கையிலிருந்து சுமார் 30 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது நாட்டின் விலைமதிப்பற்ற வரி வருவாயை இழக்கச் செய்யும் மற்றும் சட்டப்பூர்வமான, வணிகங்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கடத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று வணிகச்செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கொழும்பின் மேல் நீதிமன்றம் ஒரு தசாப்த கால கடத்தல் மற்றும் பணமோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு சீன தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து 201 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறிமுதல் செய்ததை இந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button