India News

ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் விதி மாற்றம்: இனி ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்க முடியாதா?

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ அதன் முடிவு ஒன்றினால் அண்மைக் காலத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு (Minimum Average monthly Balance – MAB) தொடர்பான விதியை ஐசிஐசிஐ மாற்றியிருக்கிறது.

இப்போது புதிதாக வங்கி கணக்கு தொடங்குவோர் தங்கள் கணக்கில் முன்பை விட அதிக பணத்தை வைத்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த விதி 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அந்த வங்கி சொல்கிறது.

அரசு விதிகளின்படி சம்பள கணக்குகள், ஜன்தன் கணக்குகள் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு விதியிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.

Related Articles

Back to top button