News

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கேரளா கஞ்சா பிடிப்பு – ஒரே நாளில் சிக்கிய 40 பொதிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றய தினம் நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை நாகர் கோவில் பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது

இச் சுற்றி வளைப்பில் பொதிகள் 40 அடங்கிய 81.300 km கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button