Sri Lanka News

கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதாக பொலிஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் உங்களின் குணங்கள் மட்டுமே சேதப்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டிய பொலிஸார், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button