News

படகு விபத்து: காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

தங்காலை, பரவிவெல்ல கடற்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கவிழ்ந்த பல நாள் மீன்பிடிப் படகு விபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படையினரின் துணையுடன் விமானப்படை மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மீனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீன்பிடிக்கச் சென்றுவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த படகு, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த 6 மீனவர்களில், நால்வர் டிங்கி படகு ஒன்றின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மற்றுமொரு மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவர் விரைவில் நல்ல நிலையில் மீட்கப்பட வேண்டும் எனப் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button