

2025 ஜூன் 21ஆம் திகதி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில், அல் உஸ்வா அமைப்பின் உயிர்காப்பு பயிலுனர்களுக்காக ஒரு சிறப்பான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சியில் மனித உரிமை சட்டம், அமைதி கட்டியெழுப்பல், மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆகிய முக்கிய தலைப்புகள் விரிவாக விளக்கப்பட்டன. குறிப்பாக, மனிதனின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவை சட்ட ரீதியாக எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து பயிலுனர்களுக்கு தெளிவான புரிதல் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் வளவலர்களாக
🔹 சட்டமன்றக் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் சட்டத்தரணி எம்.ஏ. உதுமானி
🔹 SLM. இஸ்மத் அலி (திட்டமிடல்அதிகாரி)ஆகியோர்
கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். சமூக நீதியும், அமைதி பரப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பும் முக்கியமென அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு, உயிர்காப்பு பயிலுனர்களின் அறிவையும், சமூக உறுதியும் வளர்த்த முக்கியமான கட்டமாக அமைந்தது.