
நாட்டு மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம்! மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, கத்தார் தனது வான்பரப்பை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான், இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
#கத்தார் #வான்பறப்பு #பாதுகாப்பு #மத்தியகிழக்கு #அவசரஅறிவிப்பு