World News

ஓடுபாதையை விட்டு விலகி :புற்தரையில் சென்ற விமானம்- அமெரிக்காவில் பரபரப்பு..!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி புற்தரைக்கு சென்றதால் அமெரிக்காவில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விமானம் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் சிறிது தூரம் ஓடியது.

இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button