Home இலங்கைச் செய்திகள்துபாயில் கைது செய்யப்பட்ட “பஸ் லலித்” இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட “பஸ் லலித்” இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

by Nabishad
0 comments

கொலை, துப்பாக்கிச் சூடு, தாக்குதல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருமான லலித் கன்னங்கர எனப்படும் “பஸ் லலித்” துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த சந்தேகநபர், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், துபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவினரால் இன்று (25) அதிகாலை அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை, துப்பாக்கிச் சூடு, தாக்குதல், கப்பம் பெறுதல் மற்றும் மேலும் பல குற்றச்செயல்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

banner

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment